Tuesday, June 29, 2010

அவன் :

அவ்வளவு அழகு நான்
பார்த்தது இல்லை ..
அவன் என்னை பார்த்து
சிரித்த தருணம் இன்னும்
கண்ணில் தோன்றி மறைகிறது .

அவன் என்னை கடந்த பின்
கையசைத்து ஒரு சைகை
செய்தான் - அது என்னவென்று
இன்னும் விளங்கவில்லை..!!

அவன் என்னை பார்த்து
அப்படி செய்ததும்.,
என்னை சுற்றி உள்ள
அனைவரின் கண்களும்
என்மேல் தான்...!

நானும் பதிலுக்கு கை அசைத்து
ஒரு புன்னகை சிந்தினேன்.,
ஒரு பறக்கும் முத்தமும்
கொடுத்தான்..,

என்னால் திருப்பி கொடுக்க
முடியவில்லை... - அந்த
ரெண்டு வயது பாலகனுக்கு..!!

No comments:

Post a Comment