Tuesday, March 2, 2010

பயணம் -கற்பனையே


ஐந்து வருட ஆயுளை அயல் நாட்டில் தொலைத்து
மீண்டும்
புதிய பிறவி எடுக்க பிறந்த ஊரை நோக்கி சென்ற
பயணத்தில்
பயண சீட்டும் ,
பேருந்து நடத்துனரும் ,
பள்ளி குழந்தைகள் பலர்
பாவாடை தாவணியிலும்
மாறி இருக்க

மாறாமல் இருந்தது ..நான் அமர்ந்த இருக்கையில்
படித்த காலத்தில் அவன் செதுக்கிய கல்வெட்டு
"இதயத்தில் நுழைந்த அம்புகுறி "

2 comments:

  1. நல்ல கவிதை சுதா..தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete